நாடாளுமன்ற தேர்தல்: சென்னை தாம்பரம் - நெல்லை இடையே இன்று இரவு சிறப்பு ரெயில் இயக்கம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2024-04-18 11:15 GMT

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னை தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்