ஆசிய கோப்பை: இலங்கை அணியின் வெற்றி நடைக்கு முடிவு கட்டிய வங்காளதேசம்

நடப்பு ஆசிய கோப்பை சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.;

Update:2025-09-21 09:22 IST

துபாய்,

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்‘சூப்பர்4’ சுற்று நேற்று தொடங்கியது. இதில் துபாயில் நேற்று இரவு நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த வங்காளதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தசுன் ஷனகா 64 ரன்கள் அடித்தார். வங்காளதேச அணி தரப்பில் முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சைப் ஹசன் 61 ரன்னும், தவ்ஹித் ஹிரிடாய் 58 ரன்னும் எடுத்தனர். இலங்கை தரப்பில் ஹசரங்கா, தசுன் ஷனகா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த தோல்வியின் மூலம் ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்று வீறுநடை போட்ட இலங்கை அணியின் வெற்றி பயணத்திற்கு வங்காளதேசம் முடிவு கட்டியது. 

Tags:    

மேலும் செய்திகள்