பிக்பாஷ் தொடரில் பங்கேற்க அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த ஆஸி.கிரிக்கெட் சிஇஓ
அஸ்வின் சமீபத்தில் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்றார்.;
image courtesy:PTI
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) டாட் கிரீன்பெர்க் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “அஷ்வின் போன்ற ஒரு வீரர் இங்கு வந்து பிக்பாஷ் தொடரில் விளையாடுவது பல மட்டங்களில் சிறந்ததாக இருக்கும். அவர் பிக் பாஷ் தொடருக்கு நிறைய கொண்டு வரக்கூடிய ஒரு சாம்பியன் கிரிக்கெட் வீரர்” என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எல். தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். இருப்பினும் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட உள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்காக துபாயில் நடைபெறும் ஐஎல் டி20 போன்ற தொடர்களில் தம்முடைய பெயரை விண்ணப்பித்துள்ளதாகவும் அஸ்வின் கூறியிருந்தார். இதன் காரணமாக அஸ்வின் பிக்பாஸ் தொடரில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.