முதல் டி20: இலங்கை - பாகிஸ்தான் நாளை மோதல்
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சென்று டி20 தொடரில் ஆடுகிறது.;
கொழும்பு ,
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. நாளை இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.