ஒருநாள் கிரிக்கெட்: ரோகித்துக்கு பின் ஸ்ரேயாஸ் கேப்டனா..? பி.சி.சி.ஐ. செயலாளர் பதில்

இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.;

Update:2025-08-22 18:25 IST

மும்பை,

இந்திய ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் 2027 உலகக்கோப்பை (50 ஓவர்) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.

இருப்பினும் ஒருநாள் உலகக்கோப்பை வரை அவரால் பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். அத்துடன் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் ரோகித் சர்மா 40 வயதை எட்டிவிடுவார் என்பதால் அவர் உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பது கடினம் என பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.

அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய கேப்டனை நியமிக்க பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்கு சுப்மன் கில் முன்னணி வாய்ப்பில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ரோகித் சர்மாவுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்ததாக நேற்று செய்திகள் வெளியாகின. இது கிரிக்கெட் உலகில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இது பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியாவிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சைகியா, “உங்களை போலவே எனக்கும் அது ஒரு செய்தி. அப்படிப்பட்ட விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்