விராட், ரோகித் சர்மாவின் சம்பளம் குறைப்பு..? பி.சி.சி.ஐ. திட்டம்

டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ+கிரேடில் இருப்பார்கள்.;

Update:2025-12-12 21:36 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வீரர்களை ஏ+, ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ+கிரேடில் இருப்பார்கள்.

சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். டி20 மற்றும் டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர். இந்நிலையில் இருவரையும் ஏ+ கிரேடில் இருந்து ஏ வரிசைக்கு தரமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ+ வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஏ கிரேடுக்கு செல்லும் பட்சத்தில் அவர்களின் ஊதியம் ரூ.7 கோடியிலிருந்து ரூ. 5. கோடியாக குறையும். அதே நேரத்தில் ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் டெஸ்டில் விளையாடுவதால் ஏ+ கிரேடில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ.-ன் வருடாந்திர பொதுக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மறுபுறம் 3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ+ கிரேடுக்கு முன்னேற உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்