ஜோஹர் கோப்பை ஆக்கி: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் டிரா
ஜோஹர் கோப்பைக்கான ஆக்கி போட்டி ஜோஹர் பாரு நகரில் நடந்து வருகிறது;
கோலாலம்பூர் ,
ஜோஹர் கோப்பைக்கான சர்வதேச ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் உள்ள ஜோஹர் பாரு நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான திரில்லிங்கான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த ஆட்டத்துக்கு முன்னதாக இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்று சந்திக்கிறது.