போஸ்டன் ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை அனாஹத் சிங் காலிறுதிக்கு தகுதி
அனாஹத் சிங் காலிறுதியில் ஜனா ஸ்வைபி உடன் மோத உள்ளார்.;
புதுடெல்லி,
போஸ்டன் ஓபன் ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங், அமெரிக்காவின் சார்லோட் ஜி உடன் மோதினார்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனாஹத் சிங் 11-4, 11-6, 9-11 மற்றும் 11-8 என்ற செட் கணக்கில் சார்லோட் ஜியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அனாஹத் சிங் காலிறுதியில் எகிப்து வீராங்கனை ஜனா ஸ்வைபியை எதிர்கொள்கிறார்.