புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்திய தெலுங்கு டைட்டன்ஸ்

இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் ஆடி வருகின்றன.;

Update:2025-10-08 21:01 IST

image courtesy: @ProKabaddi

சென்னை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-29 என்ற புள்ளிக்கணக்கில் அரியானாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் ஆடி வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்