புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி உ.பி.யோத்தாஸ் வெற்றி
புரோ கபடி லீக் நேற்று தொடங்கியது .;
விசாகப்பட்டினம்,
புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12-வது புரோ கபடி லீக் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது . முதற்கட்ட லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 11-ந் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், அடுத்த கட்ட ஆட்டங்கள் முறையே ஜெய்ப்பூர் (செப்.12-27), சென்னை (செப்.29- அக்.10), டெல்லி (அக்.11-23) ஆகிய இடங்களிலும் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய உ.பி.யோத்தாஸ் அணி 40-35 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
யு மும்பா - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையேயான மற்றொரு ஆட்டம் 29-29 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதை–ய–டுத்து நடந்த ஷூட்-அவுட்டில் யு மும்பா 6-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது