உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீராங்கனை

மற்றொரு இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.;

Update:2025-09-11 06:37 IST

image courtesy:PTI

லிவர்பூல்,

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான 80 கிலோவுக்கு மேலான பிரிவில் நேரடியாக காலிறுதியில் களமிறங்கிய இந்திய வீராங்கனை நுபுர் ஷியாரன் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஒல்டினோ சோடிம்போவாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் குறைந்தது வெண்கலப்பதக்கத்தை அவர் உறுதி செய்தார்.

இதில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் (51 கிலோ) துருக்கியின் ககிரோக்லு புஸ் நாசிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

முன்னதாக ஆண்கள் பிரிவில் ஜதுமணி சிங் (48 கிலோ), அபினாஷ் ஜம்வால் (65 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் வெற்றி பெற்று காலிறுதியை எட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்