‘சஸ்பென்ஸ்’-திகிலுடன் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’


‘சஸ்பென்ஸ்’-திகிலுடன் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’
x
தினத்தந்தி 5 March 2019 11:11 AM GMT (Updated: 5 March 2019 11:11 AM GMT)

“அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில், இதுவரை எந்த தலைமுறையும் சந்திக்காத-பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சினைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கிறது.

ஒரு கட்டத்தில் பிரச்சினைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற் படுத்துகிறது.

தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை ஒரு இளைஞன் கண்டு பிடித்து தனது கிராமத்தையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? என்பதை ‘சஸ்பென்ஸ்,’-திகில் கலந்து சொல்லியிருக்கிறோம்” என்கிறார், ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ படத்தின் டைரக்டர் நல்.செந்தில்குமார். இவர் மேலும் கூறுகிறார்:-

“அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில், ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ படம் தயாராகி வருகிறது. பூக்கடை ஜி.சேட்டு தயாரிக்கிறார்.

மகேந்திரன் கதாநாயகனாகவும், புதுமுகம் மியாஸ்ரீ கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், மனோஜ்குமார், ‘பசங்க’ சிவகுமார், அப்புக்குட்டி, மீராகிருஷ்ணன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார்.”

Next Story