ஜப்பானில் 50 ஆண்டுகளாக ஒளிப்பரப்பான கார்டூன் தொடர் நிறுத்தம்


ஜப்பானில் 50 ஆண்டுகளாக ஒளிப்பரப்பான கார்டூன் தொடர் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 May 2020 12:03 PM GMT (Updated: 12 May 2020 12:03 PM GMT)

ஜப்பானில் மக்கள் ஆதரவுடன் 50 ஆண்டுகளாக ஒளிப்பரப்பட்ட கார்டூன் தொடர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

டோக்கியா,

ஜப்பானில் 1969ஆம் தொடங்கி சுமார் 50 ஆண்டுகளாக சாசே சான் என்ற கார்டூன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. மாச்சிகோ ஹசிகாவா என்ற பெண் உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில், 1946-ம் ஆண்டு, ஷின்புன் என்ற சிறிய பத்திரிகையில் சித்திர கதையாக சாசே சான் வெளியானது.

பின்னர் தொலைகாட்சி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சாசே சான் கார்டூனாக பரிமாண வளர்ச்சியடைந்து. சாசே என்ற பெண்ணை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது சாசே சான் கார்டூன். 1969ஆம் ஆண்டு முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது ஜப்பான் மக்கள் சாசே சானை தலையில் வைத்து கொண்டாடினர்.

இந்த கார்டூனை பார்ப்பதற்காக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும், ஜப்பான் மக்கள் குடும்பம் குடும்பமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தொலைகாட்சியின் முன்பு அமர்ந்து சாசே சான் கார்டூனை கண்டு ரசிப்பார்கள். 

மக்களிடம் பெற்ற அமோக வரவேற்பால் சாசேசான் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பாகியது. கால போக்கில் புதிய கண்டுபிடிப்புகளும், நவீன பொழுதுபோக்கு சாதனங்களும் வளர்ந்தாலும், சாசே என்ற பெண்ணை ஜப்பானியர்கள் தங்கள் குடும்பத்தின் ஒருவராகவே கருதியதால் அந்த கார்டூன் மீதான ஆர்வம் அவர்களுக்கு குறையவில்லை. மக்களின் ஆர்வத்தை புரிந்துகொண்ட தயாரிப்பாளர்கள் சாசே சானை ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து ஒளிபரப்பு வந்தனர். இந்நிலையில், 2013ஆம் ஆண்டு, உலகிலேயே நீண்டநாள் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தது சாசே சான்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலால் ஜப்பானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சாசே சான் கார்டூன் முதல் முறையாக நிறுத்தப்படவுள்ளது ஜப்பான் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது, சினிமா மற்றும் இதர தயாரிப்பு பணிகளுக்கு ஜப்பானில் தடையிருப்பதால், சுமார் 50 ஆண்டுகளில் முதல்முறையாக வரும் ஞாயிற்றுகிழமையன்று ஜப்பானில் சாசே சானின் புதிய கதை ஒளிபரப்பாகாது என்று அந்த தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக பழைய கதை மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story