விஷம் குடித்த தர்மபுரி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாப சாவு

பாப்பாரப்பட்டி அருகே விஷம் குடித்து வகுப்பறையில் மயங்கி விழுந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பாப்பாரப்பட்டி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மகன் ஹரிதாஸ் (வயது 19). இவர் தர்மபுரி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவர் ஹரிதாஸ் கல்லூரி கழிவறைக்கு சென்று விஷம் குடித்து விட்டு கையில் பாட்டிலுடன் வகுப்பறைக்கு வந்தார்.
பின்னர் அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் மாணவர் ஹரிதாசை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவர் ஹரிதாஸ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணைஇதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.