ஆரல்வாய்மொழி அருகே பாலத்தில் இருந்து கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி சாவு


ஆரல்வாய்மொழி அருகே பாலத்தில் இருந்து  கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 13 July 2017 4:30 AM IST (Updated: 13 July 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே பாலத்தில் இருந்து கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூரில் தோவாளை கால்வாய் உள்ளது. தற்போது இது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த கல்வாயில் உள்ள பாலத்தின் கீழே நேற்று  ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். பாலத்தின் மேல் பகுதியில் சைக்கிளும், பிளாஸ்டிக் மூடைக்குள் காலி மது பாட்டில்களும் இருந்தன.

இதை பார்த்த பொதுமக்கள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஹரிகரன், ஏட்டு கணேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, இறந்து கிடந்தவர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த தொழிலாளி ஜெயக்குமார் (வயது52) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் காலி மதுபாட்டில்களை பொறுக்கி விற்று மது குடித்து வந்துள்ளார். அதன்படி, செண்பகராமன்புதூர் தோவாளை கால்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி கால்வாயில் விழுந்தார். கால்வாயில் தற்போது தண்ணீர் இல்லாததால் அவரது தலை மற்றும் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த ஜெயகுமாருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.


Related Tags :
Next Story