குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

அசோகபுரம் ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துடியலூர்,
கோவையை அடுத்த துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சியில் காந்தி நகர் மேற்கு, ஸ்ரீகாளியம்மன் கோவில் வீதி, வெங்கிட்டமாள் காலனி, பாலாஜி நகர், மந்திராலயா கார்டன், அர்ஜூன் அவென்யூ ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு கடந்த 45 நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அந்த பகுதி மக்கள் அசோகபுரம் ஊராட்சி மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று காலை 9 மணி அளவில் இடிகரை- அன்னூர் ரோடு செங்காளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். அவர்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்து வந்த துடியலூர் போலீசார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாரதா, பெரியநாயக்கன்பாளையம் முன்னாள் ஒன்றிய சேர்மன் சாந்தாராம், அசோகபுரம் ஊராட்சி செயலர் லீலா கிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், ‘உங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவையை அடுத்த துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சியில் காந்தி நகர் மேற்கு, ஸ்ரீகாளியம்மன் கோவில் வீதி, வெங்கிட்டமாள் காலனி, பாலாஜி நகர், மந்திராலயா கார்டன், அர்ஜூன் அவென்யூ ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு கடந்த 45 நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அந்த பகுதி மக்கள் அசோகபுரம் ஊராட்சி மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று காலை 9 மணி அளவில் இடிகரை- அன்னூர் ரோடு செங்காளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். அவர்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்து வந்த துடியலூர் போலீசார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாரதா, பெரியநாயக்கன்பாளையம் முன்னாள் ஒன்றிய சேர்மன் சாந்தாராம், அசோகபுரம் ஊராட்சி செயலர் லீலா கிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், ‘உங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story