சேலத்தில் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு

சேலத்தில் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி செங்கரடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் தங்கதுரை (வயது 24). லாரி டிரைவர். இவர், நேற்று காலை சேலம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆயில் மில்லில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதால், அங்குள்ள குப்பைகளையும், மண்களையும் லாரியில் ஏற்றி செல்லும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, லாரியின் அருகே தங்கதுரை நின்றபோது, உயர்அழுத்த மின்கம்பி திடீரென அவர் மீது பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதால் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றிய தகவல் தங்கதுரையின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆயில் மில்லிற்கு சென்று இறந்துபோன தங்க துரையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி டிரைவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் தங்கதுரையின் உடலை வாங்க மறுத்து திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த உறவினர்கள் தங்கதுரையின் உடலை ஆம்புலன்சில் வாங்கிக்கொண்டு சொந்த ஊரான செங்கரடுக்கு புறப்பட்டு சென்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி செங்கரடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் தங்கதுரை (வயது 24). லாரி டிரைவர். இவர், நேற்று காலை சேலம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆயில் மில்லில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதால், அங்குள்ள குப்பைகளையும், மண்களையும் லாரியில் ஏற்றி செல்லும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, லாரியின் அருகே தங்கதுரை நின்றபோது, உயர்அழுத்த மின்கம்பி திடீரென அவர் மீது பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதால் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றிய தகவல் தங்கதுரையின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆயில் மில்லிற்கு சென்று இறந்துபோன தங்க துரையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி டிரைவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் தங்கதுரையின் உடலை வாங்க மறுத்து திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த உறவினர்கள் தங்கதுரையின் உடலை ஆம்புலன்சில் வாங்கிக்கொண்டு சொந்த ஊரான செங்கரடுக்கு புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story