சத்தாரா அணையில் மூழ்கி மும்பை மாணவர்கள் 2 பேர் பலி

சத்தாரா அணையில் மூழ்கி மும்பை கல்வி நிறுவனத்தில் படித்து வந்த 2 மாணவர்கள் பலியானார்கள்.
மும்பை,
இந்தநிலையில் நண்பர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் சத்தாரா மாவட்டம் வய் தாலுகாவில் உள்ள தோம் அணைக்கு சென்றனர். இதில், சவுமியாஜித் ஹரிபிரசாத் மற்றும் அவினாஷ் ஆகியோர் அணையில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். மற்ற 2 பேரும் கரையில் அமர்ந்து இருந்தனர்.
இந்தநிலையில் திடீரென அணையில் குளித்துக்கொண்டு இருந்த 2 பேரும் மாயமாகினர். வெகுநேரமாக 2 பேரும் மேலே வராததால் கரையில் அமர்ந்து இருந்த நண்பர்கள் உதவிகேட்டு அலறினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதி மக்களுடன் மாணவர்களை அணையில் இறங்கி தேடினர். ஆனால் அவர்களால் தண்ணீரில் மூழ்கிய மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்தநிலையில் பல மணி நேர தேடுதலுக்கு பிறகு தண்ணீரில் மூழ்கிய மாணவர்கள் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story