மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 2 Feb 2018 10:15 PM GMT (Updated: 2 Feb 2018 7:10 PM GMT)

பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே ஞாலம் சங்கரலிங்கப்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகேசன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கமலம் (வயது 52). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கமலம் துவரங்காட்டில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலையில் கமலம் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டார். அவரை செங்கல்சூளை உரிமையாளர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் முக்கடல் மாவிளை பகுதியில் சென்ற போது, கமலத்தின் கையில் இருந்த மதிய உணவு பொட்டலம் கீழே விழுந்தது. அதை பிடிப்பதற்காக கமலம் முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கமலம் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே, அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கமலம் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story