ஆலங்குளத்தில் கார் உதிரிபாகங்கள் விற்கும் கடையில் பொருட்கள் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


ஆலங்குளத்தில் கார் உதிரிபாகங்கள் விற்கும் கடையில் பொருட்கள் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Feb 2018 8:45 PM GMT (Updated: 20 Feb 2018 3:47 PM GMT)

ஆலங்குளத்தில் கார் உதிரிபாகங்கள் விற்கும் கடையின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலங்குளம்,

ஆலங்குளத்தில் கார் உதிரிபாகங்கள் விற்கும் கடையின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கார் உதிரிபாகங்கள் விற்கும் கடை

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஜார்ஜ் செல்வராஜ் மகன் பிரான்சிஸ் (வயது 31). இவர் தென்காசி செல்லும் சாலையின் ஓரத்தில் கார் உதிரிபாகங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீடு திரும்பினார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ‌ஷட்டர் பாதி திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

ரூ.1½ லட்சம் பொருட்கள் திருட்டு

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்தனர். கடையில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். கடையில் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏராளமான வாகனங்கள் செல்லும் சாலை ஓரத்தில் இருக்கும் உள்ள கடையில் மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story