சேலத்தில் 5 ரவுடிகள் கைது

சேலத்தில் மேலும் 5 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
கன்னங்குறிச்சி,
சேலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ரவடிகளை போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில் போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுவரை 30-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிச்சிப்பாளையம் பகுதியில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சூரியின் மகனான சிலம்பரசன் மற்றும் ஜெயக்குமார், ஜான் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.போலீசார் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் திடீரென தலைமறைவானார்கள். இந்த நிலையில் சிலம்பரசன் (வயது32), ஜெயக்குமார்(28), ஜான்(25) ஆகிய 3 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் கைது செய்தார். மேலும் சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதேபோல் செவ்வாய்பேட்டை கபிலர் தெருவை சேர்ந்த சங்கர்(64), குகை பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. ரவுடிகளான இவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் சங்கரை போலீசார் கைது செய்தனர் தலைமறைவான லோகேஸ்வரனை தேடி வருகின்றனர்.
சேலம் விநாயகம்பட்டி சக்தி நகரை சேர்ந்தவர் சகாதேவன்(42). ரவுடியான இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளனர். இவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சகாதேவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ரவடிகளை போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில் போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுவரை 30-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிச்சிப்பாளையம் பகுதியில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சூரியின் மகனான சிலம்பரசன் மற்றும் ஜெயக்குமார், ஜான் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.போலீசார் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் திடீரென தலைமறைவானார்கள். இந்த நிலையில் சிலம்பரசன் (வயது32), ஜெயக்குமார்(28), ஜான்(25) ஆகிய 3 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் கைது செய்தார். மேலும் சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதேபோல் செவ்வாய்பேட்டை கபிலர் தெருவை சேர்ந்த சங்கர்(64), குகை பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. ரவுடிகளான இவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் சங்கரை போலீசார் கைது செய்தனர் தலைமறைவான லோகேஸ்வரனை தேடி வருகின்றனர்.
சேலம் விநாயகம்பட்டி சக்தி நகரை சேர்ந்தவர் சகாதேவன்(42). ரவுடியான இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளனர். இவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சகாதேவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story