இலங்கை சிறையில் இருந்து மேலும் 8 மீனவர்கள் விடுதலை


இலங்கை சிறையில் இருந்து மேலும் 8 மீனவர்கள் விடுதலை
x
தினத்தந்தி 11 April 2018 12:23 AM GMT (Updated: 11 April 2018 12:23 AM GMT)

இலங்கை சிறையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ராமேசுவரம்,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் மீன்பிடிக்கச்சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி 8 மீனவர்களையும் பிடித்து சென்று இலங்கையில் உள்ள ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் நேற்று 8 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. இதையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட 19 ராமேசுவரம் மீனவர்களும் தூதரக அலுவலகத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் இன்று (புதன்கிழமை) மதியம் இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லையில், இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து 27 மீனவர்களும் இன்று மாலை காரைக்கால் வந்து சேருகின்றனர். இந்த தகவலை ராமேசுவரம் நிரபராதி மீனவர்களின் விடுதலை கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் தெரிவித்தார். 

Next Story