ஒலிபரப்பு நிறுவனத்தில் அதிகாரி வேலை


ஒலிபரப்பு நிறுவனத்தில் அதிகாரி வேலை
x
தினத்தந்தி 16 April 2018 6:48 AM GMT (Updated: 16 April 2018 6:48 AM GMT)

ஒலிபரப்பு நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்களுக்கு 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பீசில் (BECIL). ஒலிபரப்பு பொறியியல் சார்ந்த நிறுவனமான இது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் கீழ் செயல்படுகிறது. தற்போது இந்த நிறு வனத்தில் பேஷன்ட் கேர் மேனேஜர், ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு 90 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு 35 வயது பூர்த்தி அடைந்தவர்களும், 40 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். 1-1-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். ‘லைப் சயின்ஸ்’ பட்டப்படிப்புடன், ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் முதுநிலை படிப்பு படித்தவர்கள், ஓராண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் பேஷன்ட் கேர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஓராண்டு பணி அனுபவம் அவசியம். இந்தப் பிரிவில் 20 பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேஷன்ட் கேர் கோஆர்டினேட்டர் பணிக்கு 70 இடங்கள் உள்ளன. லைப்சயின்ஸ் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் மருத்துவமனை சார்ந்த பணிகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-4-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.becil.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும். 

Next Story