வங்கி அதிகாரி பணிக்கான தேர்வு சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் 17-ந் தேதி தொடங்குகிறது


வங்கி அதிகாரி பணிக்கான தேர்வு சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் 17-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 11 May 2018 9:00 PM GMT (Updated: 11 May 2018 7:46 PM GMT)

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அதிகாரி தேர்ந்தெடுப்பதற்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

திருச்செந்தூர், 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அதிகாரி தேர்ந்தெடுப்பதற்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.

அதிகாரி பணி

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அதிகாரி பணிக்கான எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் 13-5-2018-க்குள் (நாளை) விண்ணப்பம் செய்திட வேண்டும்.

1-4-2018-ந் தேதியின் படி 21 வயது முதல் 30 வயதுக்கு மிகாதவர்கள் இத்தேர்வை எழுத தகுதியானவர்கள்.

இந்த தேர்வை எழுதுபவர்கள் 31-8-2018 தேதியின் படி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வுகள் பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வு என இரு நிலைகளில் நடைபெறுகிறது.

பயிற்சி வகுப்புகள்

இந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.

இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 17-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை திருச்செந்தூர், சிவந்தி அகாடமி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.3 ஆயிரத்து 500 ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் வெளியில் செல்லவோ மற்றும் விடுப்பு எடுக்கவோ அனுமதி கிடையாது.

தங்கும் வசதி

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மகளிர் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாளான 17-5-2018 அன்று நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், திருச்செந்தூர் தூத்துக்குடி சாலையில் உள்ள சிவந்தி அகாடமியில் 17-5-2018 அன்று காலை 9 மணிக்கு பயிற்சி கட்டணம் ரூ. 3 ஆயிரத்தை நேரில் செலுத்தி சேர்ந்துகொள்ளலாம்.

பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.

மேலும் தகவலுக்கு 04639-242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story