ராஜபாளையம் அருகே துக்கம் விசாரிக்க வந்தவர் விபத்தில் சாவு


ராஜபாளையம் அருகே துக்கம் விசாரிக்க வந்தவர் விபத்தில் சாவு
x
தினத்தந்தி 12 May 2018 9:45 PM GMT (Updated: 12 May 2018 7:15 PM GMT)

ராஜபாளையம் அருகே துக்கம் விசாரிக்க வந்தவர் விபத்தில் உயிரிழந்தார்.

ராஜபாளையம்,.

நெல்லை மாவட்டம் தேவிபட்டினம் காமராஜர் தெருவை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் முருகன் (வயது24). கூலித் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் தனது உறவினர் வீட்டில் துக்கம் விசாரிக்க வந்தார். துக்கம் விசாரித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

ராஜபாளையம் கோவிலூர் விதைப்பண்னை அருகே உள்ள வளைவில் திரும்பிய போது எதிரே மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் உயிர் இழந்தார். விபத்து குறித்து சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் விசாரணை மேற்கொண்டார். இருசக்கர வாகனத்தில் வந்த கோவிலூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story