பிளஸ்–2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் 28–வது முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை


பிளஸ்–2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் 28–வது முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
x
தினத்தந்தி 16 May 2018 10:45 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

பிளஸ்–2 தேர்வு முடிவுகளின் படி விருதுநகர் மாவட்டம் உதயமாகி 33 ஆண்டுகளில் 28–வது முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

விருதுநகர்,

பிளஸ்–2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 24,297 மணவ–மாணவிகளில் 23,580 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.05 ஆகும். இதன்படி இம்மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தேர்வு எழுதிய 10,797 மாணவர்களில் 10,285 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.26 ஆகும். தேர்வு எழுதிய 13,500 மாணவிகளில் 13,295 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.48 ஆகும்.

விருதுநகர் மாவட்டம் கடந்த 1985–ம் ஆண்டு உதயமானது. 1985–ம் ஆண்டிலிருந்து 2010– ம் ஆண்டு வரை இம்மாவட்டம் தொடர்ந்து 25 ஆண்டுகள் பிளஸ்–2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து 2015–ம் ஆண்டும் 2017–ம் ஆண்டும் முதலிடம் பெற்றது. தற்போது இந்த ஆண்டு 28–வது முறையாக மாநில அளவில் பிளஸ்–2 தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இம்மாவட்டத்திலுள்ள 3 கல்வி மாவட்டங்களில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 7,921 மாணவ–மாணவிகளில் 7,650 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.58 ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 7,670 பேரில் 7,430 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.87 ஆகும். விருதுநகர் கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 8,706 பேரில் 8,500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.63 ஆகும்.

பள்ளி கல்வித்துறை பிளஸ்–2 தேர்வில் மாநில மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களின் பெயர்களை அறிவிக்கக்கூடாது என்று தடை விதித்துள்ள நிலையில் இம்மாவட்டத்தில் முதல் மூன்று அதிக மதிப்பெண்கள் பெற்ற விவரங்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் 1,178 மதிப்பெண்களும் 2–ம் இடம் பெற்றவர் 1,177 மதிப்பெண்களும் 3–ம் இடம் பெற்றவர் 1,174 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் 1,171 மதிப்பெண்களும் 2–ம் பெற்றவர் 1,170 மதிப்பெண்களும் 3–ம் இடம் பெற்றவர் 1,168 மதிப்பெண்களூம் பெற்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 1–ம் இடம் பிடித்தவர் 1,177 மதிப்பெண்களூம் 2–ம் இடம் பெற்றவர் 1,176 மதிப்பெண்களூம், 3–ம் இடம் பெற்றவர் 1,170 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 73 மாணவ–மாணவிகள் 1,151 லிருந்து 1,180 வரையிலும், 215 மாணவ–மாணவிகள் 1,126 லிருந்து 1,150 வரையிலும், 354 மாணவ–மாணவிகள் 1,101 லிருந்து 1,125 வரையிலும் 2,643 மாணவ–மாணவிகள் 1,001 லிருந்து 1,100 வரையிலும் 4,155 பேர் 901 லிருந்து 1,000 வரையிலும், 5,094 பேர் 801 லிருந்து 900 வரையிலும் 5,083 பேர் 701 லிருந்து 800 வரையிலும், 6,680 பேர் 700–க்கு கீழும் மதிப்பெண் பெற்றிருந்தனர்.

அறிவியல் பாட தேர்வினை 6,516 மாணவர்களும் 8,173 மாணவிகளும் ஆகமொத்தம் 14,689 பேர் எழுதியிருந்தனர். இதில் 6,275 மாணவர்களும் 8,078 மாணவிகளும் ஆக மொத்தம் 14,353 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.71 ஆகும். வணிகவியல் பாட பிரிவு தேர்வினை 3,033 மாணவர்களும் 4,179 மாணவிகளும் ஆகமொத்தம் 7,212 பேர் தேர்வு எழுதினர். இதில் 2,877 மாணவர்களும் 4,092 மாணவிகளும் ஆகமொத்தம் 6,969 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.63 ஆகும். கலை பிரிவில் 150 மாணவர்களும் 196 மாணவிகளும் ஆக மொத்தம் 346 பேர் தேர்வு எழுதினர். இத்ல் 141 மாணவர்களும் 191 மாணவிகளும் ஆகமொத்தம் 332 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.95 ஆகும். தொழில்நுட்ப பாடப்பிரிவில் 1,098 மாணவர்களூம் 952 மாணவிகளும் ஆக மொத்தம் 2,050 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 992 மாணவர்களூம் 934 மாணவிகளும் ஆகமொத்தம் 1,926 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.95 ஆகும்.

ஆங்கிலப் பாடத்தில் தேர்வெழுதிய 24,297 பேரில் 24,022 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.87 ஆகும். மொழிப்பாடத்தில் தேர்வெழுதிய 24,297 பேரில் 24,130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.31 ஆகும். இயற்பியல் பாடத்தில் தேர்வெழுதிய 14,689 பேரில் 14,513 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.8 ஆகும்.

வேதியியல் பாடத்தேர்வு எழுதிய 14,689 பேரில் 14,403 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.05 ஆகும். உயிரியல் பாடத்தேர்வு எழுதிய 8,814 பேரில் 8,685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.54 ஆகும். தாவரவியல் பாடத் தேர்வில் தேர்வெழுதிய 2,392 பேரில் 2,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.08 ஆகும். விலங்கியல் தேர்வெழுதிய 2,392 பேரில் 2,324 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.16 ஆகும். கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வெழுதிய 7,517 பேரில் 7,444 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.03 ஆகும்.

கணக்கு பாட தேர்வெழுதிய 11,606 பேரில் 11,464 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.78 ஆகும். வரலாற்று பாட தேர்வெழுதிய 4,100 பேரில் 4,028 பேர் தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி சதவீதம் 98.24 ஆகும். வணிகவியல் பாட தேர்வு எழுதிய 8,349 பேரில் 8,156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.69 ஆகும். கணக்கியல் பாட தேர்வெழுதிய 7,561 பேரில் 7,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.98 ஆகும். பொருளியல் பாட தேர்வு எழுதிய 7,558 பேரில் 7,377 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.61 ஆகும்.

இம்மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் தேர்வெழுதிய 96 பேரில் 71 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 73.96 ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தேர்வெழுதிய 125 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வெழுதிய 11,342 பேர்களில் 11,164 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.43 ஆகும்.

அரசு பள்ளிகளில் தேர்வெழுதிய 8,153 பேரில் 7,685 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.26 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. நகராட்சி பள்ளிகளில் தேர்வெழுதிய 357 பேரில் 351 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.32 ஆகும். சுயநிதி பள்ளிகளில் தேர்வெழுதிய 2,884 பேரில் 2,861 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.26 ஆகும். அரசிடம் இருந்து பகுதி உதவி பெறும் பள்ளிகளில் தேர்வெழுதிய 1,340 பேரில் 1,323 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.73 ஆகும்.


Next Story