காஞ்சீபுரம் அருகே லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு


காஞ்சீபுரம் அருகே லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
x
தினத்தந்தி 16 May 2018 9:30 PM GMT (Updated: 16 May 2018 8:05 PM GMT)

காஞ்சீபுரம் அருகே லாரி–மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே மாகரல் அடுத்த மலையாங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 22). இவர் மோட்டார் சைக்கிளில் காவான்தண்டலம் பகுதியில் இருந்து வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காஞ்சீபுரம் அருகே வள்ளிமேடு என்ற இடத்தில் செல்லும்போது, கண் இமைக்கும் நேரத்தில் ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பிரபாகரன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story