மந்திரி சபை கூட்டத்தில் சிவசேனா எதிர்ப்பு


மந்திரி சபை கூட்டத்தில் சிவசேனா எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 May 2018 9:30 PM GMT (Updated: 16 May 2018 9:30 PM GMT)

உப்பு படுகை நிலங்களில் வீட்டுமனைகளுக்கு அனுமதி வழங்கும் முடிவுக்கு மந்திரி சபை கூட்டத்தில் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மும்பை,

மாநில அரசின் ‘மும்பை மேம்பாட்டு திட்டம் 2034’ குறித்த மந்திரி சபை கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது மும்பையில் உள்ள உப்பு படுகைகளில் வீட்டுமனைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்க மந்திரி சபை சார்பில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் உப்புபடுகை நிலங்களில் வீட்டுமனைகளுக்கு அனுமதி அளிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி மாநில சுற்றுச்சூழல் மந்திரி ராம்தாஸ் கதம்(சிவசேனா) இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நானார் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டம் தொடர்பாக சிவசேனா மற்றும் பா.ஜனதாவுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகையில், தற்போதைய உப்பு படுகை விவகாரம் தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக கடந்த மாதம் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், மும்பை உப்புபடுகைகளை பாதுகாக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story