குன்னத்தூரில் ஓய்வூரியர்கள் ஆர்ப்பாட்டம்


குன்னத்தூரில் ஓய்வூரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2018 10:00 PM GMT (Updated: 8 Jun 2018 7:45 PM GMT)

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குன்னத்தூர்,

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊத்துக்குளி வட்டார தலைவர் எம்.பாக்கியநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் ஜார்ஜ் முன்னிலைவகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, 21 மாத நிலுவை தொகையை வழங்கவேண்டும். மாத மருத்துவப்படி ரூ.1,000 வழங்கவேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கவேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் வட்டார செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றிகூறினார்.


Next Story