முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கொலை மிரட்டல் பாதுகாப்பு அதிகரிப்பு


முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கொலை மிரட்டல் பாதுகாப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2018 10:30 PM GMT (Updated: 8 Jun 2018 10:11 PM GMT)

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னா விசுக்கு மாவோயிஸ் டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மும்பை, 

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு மாவோயிஸ் டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கொலை மிரட்டல்

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத் தினருக்கு மாவோயிஸ்ட் அமைப்பிடம் இருந்து 2 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது. அந்த 2 மிரட்டல் கடிதத்திலும் கடந்த ஏப்ரல் மாதம் கட்சிரோலி மாவட் டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 16 நக்சலை ட்டுகள் சுட்டுக்கொல்லப் பட்டது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக மராட்டிய உள்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு

மேலும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மராட்டிய முதல்-மந்திரிக்கு மாவோயிஸ்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story