மாமல்லபுரம் அருகே விபத்து: தாறுமாறாக ஓடிய கார் 2 வேன்கள் மீது அடுத்தடுத்து மோதல்; வாலிபர் சாவு


மாமல்லபுரம் அருகே விபத்து: தாறுமாறாக ஓடிய கார் 2 வேன்கள் மீது அடுத்தடுத்து மோதல்; வாலிபர் சாவு
x
தினத்தந்தி 8 Jun 2018 10:55 PM GMT (Updated: 8 Jun 2018 10:55 PM GMT)

மாமல்லபுரம் அருகே தாறுமாறாக ஓடிய கார் சாலையில் வந்த 2 வேன்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

மாமல்லபுரம், 

திருவண்ணாமலை மாவட்டம், அழகேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மகிமைதாஸ் (வயது29). இவர் தனது நண்பருடன் புதுச்சேரி சென்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் மாமல்லபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அவரது கார் மாமல்லபுரம் அருகே மணமை என்ற இடத்தில் வரும் போது திடீரென தாறுமாறாக ஓடி எதிரே வந்த மற்ற 2 வேன்கள் மீது அடுத்தடுத்து கார் மோதி அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

வாலிபர் சாவு; 15 பேர் காயம்

இதில் காரில் வந்த மகிமைதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். 2 வேன்களில் வந்த 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக மணமை இ.சி.ஆர். சாலையில் 30 நிமிடநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Next Story