பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2018 10:15 PM GMT (Updated: 9 Jun 2018 7:07 PM GMT)

புதுஏரி அருகே வந்த போது, அந்த வழியாக முகத்தில் துணியை கட்டி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி வசந்தா (வயது 35). ராஜமாணிக்கம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், வசந்தா நேற்று முன்தினம் தனது தாய் ஊரான உஞ்சினி கிராமத்திற்கு சென்று விட்டு சைக்கிளில் மருவத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். புதுஏரி அருகே வந்த போது, அந்த வழியாக முகத்தில் துணியை கட்டி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story