பெரம்பலூரில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்


பெரம்பலூரில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 14 Jun 2018 10:45 PM GMT (Updated: 14 Jun 2018 9:37 PM GMT)

பெரம்பலூரில், உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பெரம்பலூர்,

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் பாலக்கரை அருகே தொடங்கிய ஊர்வலம், பழைய பஸ் நிலையம் வழியாக தாசில்தார் அலுவலகம் அருகே சென்று முடிவடைந்தது.

ஊர்வலத்தில் தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர்.

ஊர்வலத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலரும், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனருமான டாக்டர் சம்பத், மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் சிரில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மருத்துவ அலுவலர் திவ்யா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், மாவட்ட நம்பிக்கை மைய மேற்பார்வையாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story