கொடைக்கானல் பகுதியில் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்தது. இதன் காரணமாக பழனி பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
பழனி,
அதன்படி பழனியை அடுத்த பாலசமுத்திரம் அருகேயுள்ள பாலாறு- பொருந்தலாறு அணையின் மொத்த உயரமான 65 அடியில் தற்போது 35.11 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 66 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணையில், தற்போது 54.5 அடி தண்ணீர் உள்ளது. கடந்த சில நாட்களாக நீர் வரத்து இல்லாத நிலையில், தற்போது அணைக்கு வினாடிக்கு 10 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணையில், தற்போது 40.94 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 8 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றைய நிலவரப்படி 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி பழனியை அடுத்த பாலசமுத்திரம் அருகேயுள்ள பாலாறு- பொருந்தலாறு அணையின் மொத்த உயரமான 65 அடியில் தற்போது 35.11 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 66 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணையில், தற்போது 54.5 அடி தண்ணீர் உள்ளது. கடந்த சில நாட்களாக நீர் வரத்து இல்லாத நிலையில், தற்போது அணைக்கு வினாடிக்கு 10 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணையில், தற்போது 40.94 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 8 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றைய நிலவரப்படி 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story