ஆவடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


ஆவடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 3 July 2018 11:35 PM GMT (Updated: 3 July 2018 11:35 PM GMT)

ஆவடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆவடி, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த செருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 35). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணியில் கருணாநிதி ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் ஓரம் இருந்த உயர் அழுத்த மின் கம்பி அவர் மீது உரசியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்ட கருணாநிதியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story