சிரித்தால் வழி கிடைக்கும்


சிரித்தால் வழி கிடைக்கும்
x
தினத்தந்தி 12 July 2018 9:45 PM GMT (Updated: 12 July 2018 6:12 AM GMT)

புதிதாக வந்திருக்கிறது, சிரித்தால் வழி விடும் கதவுகள்.

துபாய் நகரத்தை தொழில்நுட்ப சொர்க்கம் என்றே சொல்லலாம். ஏனெனில் உலகில் வேறு எங்கும் அறிமுகமாகாத தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, அது துபாய் நகரின் பயன்பாட்டிற்கு சர்வ-சாதாரணமாக வந்துவிடும்.

அப்படிதான் புதிதாக வந்திருக்கிறது, சிரித்தால் வழி விடும் கதவுகள். இத்தகைய கதவுகள் மனிதர்களின் சிரிப்பை அடையாளம் கண்டு திறந்து மூடக்கூடியவை. அதனால் பெரும் சோகமுள்ள மனிதர்கள் கூட, இந்த கதவிடம் சிரித்தால் மட்டுமே வழி கிடைக்கும். தற்போது துபாயில் ஒருசில வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மட்டுமே சிரிக்க வைத்துக் கொண்டி ருக்கும் இந்த கதவுகள், வெகு விரைவில் எல்லா இடங்களிலும் மக்களை சிரிக்க வைக்க இருக்கிறதாம். 

Next Story