பாப்பாரப்பட்டி அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை


பாப்பாரப்பட்டி அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 16 July 2018 11:15 PM GMT (Updated: 16 July 2018 5:10 PM GMT)

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள எர்ரப்பட்டியை சேர்ந்த கஸ்தூரி (வயது 22). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கஸ்தூரி பரிதாபமாக இறந்தார்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள எர்ரப்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம், கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 22). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கஸ்தூரிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. கடந்த 9–ந்தேதி அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கஸ்தூரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story