குடும்பத்தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்


குடும்பத்தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
x
தினத்தந்தி 16 July 2018 11:30 PM GMT (Updated: 16 July 2018 5:41 PM GMT)

நல்லம்பள்ளி அருகே குடும்பத்தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.

நல்லம்பள்ளி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள உழவன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 42), விவசாயி. இவருடைய மனைவி மணிலா (37). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏ ற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த மணிலா தற்கொலை செய்து கொள்வதற்காக தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கணவன்-மனைவி 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


ஆனால் செல்லும் வழியிலேயே மணிலா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பழனிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story