டிப்ளமோ என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை


டிப்ளமோ என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 3 Aug 2018 10:53 PM GMT (Updated: 3 Aug 2018 10:53 PM GMT)

பூதப்பாண்டி அருகே முறை பெண்ணை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில், டிப்ளமோ என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பூதப்பாண்டி,



இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பூதப்பாண்டி அருகே மார்த்தாள் சி.எஸ்.ஐ. காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் மனோகரன் (வயது 28), டிப்ளமோ என்ஜினீயர். இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு, மாமன் மகளை திருமணம் செய்து கொடுப்பதாக பெரியவர்கள் கூறியிருந்ததாக தெரிகிறது.

திருமண கனவுகளுடன் இருந்த மனோகரன் நேற்று முன்தினம் இரவு விடுமுறையில் ஊருக்கு வந்தார். தனது பெற்றோரிடம் மாமன் வீட்டுக்கு சென்று திருமணம் குறித்து பேசும்படி கூறியுள்ளார். அப்போது, பெண்ணின் பெற்றோர், தற்போது திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாக தாயார் கூறினார். இதை கேட்டதும் மனோகரன் மனமுடைந்தார். அத்துடன் மிகுந்த சோகத்தில் தூங்க சென்றார்.

நேற்று காலையில் வெகுநேரமாகியும் மனோகரன் படுக்கையில் இருந்து எழும்பவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த தாயார் அவரை எழுப்ப முயன்றார். அப்போது, மனோகரன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் மயங்கி கிடந்த மனோகரனை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் மனோகரன் பரிதாபமாக இறந்தார். முறை பெண்ணை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மனோகரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முறைபெண்ணை திருமணம் செய்ய முடியாததால், டிப்ளமோ என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story