திருவண்ணாமலையில் என்ஜினீயர் வி‌ஷம் குடித்து தற்கொலை


திருவண்ணாமலையில் என்ஜினீயர் வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 Aug 2018 12:36 AM GMT (Updated: 8 Aug 2018 12:36 AM GMT)

திருவண்ணாமலையில் என்ஜினீயர் வி‌ஷம் குடித்து தற்கொலை கொண்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 52), காய்கறி கடை வைத்துள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் இந்திரகுமார் (24), என்ஜினீயர். இவர், வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story