தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் வருகிற 11–ந் தேதி நடக்கிறது


தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் வருகிற 11–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 8 Aug 2018 9:30 PM GMT (Updated: 8 Aug 2018 2:29 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் வருகிற 11–ந் தேதி நடக்கிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் வருகிற 11–ந் தேதி நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சிறப்பாக நடைபெற, பொது வினியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான (ஆகஸ்டு) சிறப்பு முகாம் வருகிற 11–ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன ஸ்மார்ட் கார்டுக்கு பதிலாக புதிய கார்டு பெறுதல் போன்றவை செய்து கொடுக்கப்பட உள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டுகளுக்கு உரிய தரவுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இந்த முகாமில் பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

மேற்பார்வை அலுவர்களாக...

தூத்துக்குடி தாலுகாவில் நடக்கும் சிறப்பு முகாமுக்கு தூத்துக்குடி உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு தூத்துக்குடி தனித்துணை ஆட்சியரும் (முத்திரை), திருச்செந்தூர் தாலுகாவிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகாவிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், கோவில்பட்டி தாலுகாவிற்கு கோவில்பட்டி உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், விளாத்திகுளம் தாலுகாவிற்கு தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டயபுரம் தாலுகாவிற்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளரும் (நிலம்), கயத்தாறு தாலுகாவிற்கு கலால் உதவி ஆணையரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story