தாலுகா அலுவலகங்களில் இன்று பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


தாலுகா அலுவலகங்களில் இன்று பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 7 Sep 2018 9:30 PM GMT (Updated: 7 Sep 2018 12:54 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று(சனிக்கிழமை) பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று(சனிக்கிழமை) பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

சிறப்பு முகாம்

பொது வினியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த (செப்டம்பர்) மாதத்துக்கான சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைத்து நடக்க உள்ளது.

இந்த முகாமில், ஸ்மார்ட்டு கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன ஸ்மார்ட்டு கார்டை புதிதாக பெறுதல் போன்ற குறைகள் முகாமிலேயே உடனுக்குடன் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டுக்குரிய தரவுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இந்த முகாமில் பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.

மேற்பார்வையாளர்கள்

இந்த முகாமிற்கு தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகா அலுவலகங்களுக்கு தூத்துக்குடி தனித்துணை கலெக்டர் (முத்திரை), திருச்செந்தூர் தாலுகாவிற்கு உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டயபுரம் தாலுகாவிற்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளரும் (நிலம்), கயத்தாறு தாலுகா அலுவலகத்திற்கு கலால் உதவி ஆணையரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாம்களில் பொதுமக்கள் மனுக்கள் கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story