வள்ளியூர் அருகே தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு


வள்ளியூர் அருகே தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா  அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Sep 2018 9:15 PM GMT (Updated: 9 Sep 2018 5:45 AM GMT)

வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

வள்ளியூர்,

வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 

மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், பிரபாகரன், விஜிலா சத்யானந்த், இன்பதுரை எம்.எல்.ஏ., மாநில கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன் வரவேற்றார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் வேளாண்மை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை சார்பில் 169 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

விழாவில் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம் (வள்ளியூர்), அந்தோணி அமலராஜா (ராதாபுரம்), வள்ளியூர் நகர செயலாளர் தவசிமுத்து, ராதாபுரம் தாசில்தார் புகாரி, வள்ளியூர் யூனியன் ஆணையாளர் ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுசிலா உள்பட பலர் கலந்துகொண்டனர். தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் ஷாஜகான் கபீர் நன்றி கூறினார்.


Next Story