வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை


வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Sep 2018 9:30 PM GMT (Updated: 12 Sep 2018 5:00 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வத்தராயன்தெத்து கிராம்ததை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகன் முரளி(வயது 35), மகள் புனிதா(33). பால்ராஜ் தனக்கு சொந்தமான 19 ஏக்கர் நிலத்தை, இருவருக்கும் தலா 6 ஏக்கர் பிரித்து கொடுத்துள்ளார். மீதமுள்ள நிலத்தை தனது பெயரில் பால்ராஜ் வைத்திருந்தார். 

இந்தநிலையில் அந்த நிலத்தையும் தனது பெயரில் எழுதி தரும்படி முரளி தனது தந்தையை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்ராஜ், சாக்காங்குடியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.

தனது பெயருக்கு சொத்து எழுதி தராததால் மனமுடைந்த முரளி, சம்பவத்தன்று வீட்டில் வி‌ஷத்தை குடித்து விட்டார். பின்னர் சாக்காங்குடியில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்று தனது பெயருக்கு சொத்து எழுதி தரும்படி கேட்டார். இதற்கிடையே அவர் வீட்டிலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முரளியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முரளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story