4 வருடங்களாக காதலித்து விட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது


4 வருடங்களாக காதலித்து விட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Sep 2018 10:15 PM GMT (Updated: 12 Sep 2018 6:42 PM GMT)

செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் பெருமாள்கோவில் தெருவைச்சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 24). இவர்,

சென்னை

செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் பெருமாள்கோவில் தெருவைச்சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 24). இவர், செங்குன்றத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்து, 4 வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரேம்குமாரை வற்புறுத்தினார். ஆனால் அதற்கு பிரேம்குமார் மறுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் மாதவரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story