திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கி அதிகாரிகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 17-ந்தேதி தொடங்குகிறது


திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கி அதிகாரிகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 17-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 Sep 2018 10:30 PM GMT (Updated: 12 Sep 2018 10:13 PM GMT)

திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கி அதிகாரிகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கி அதிகாரிகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.

எழுத்துத் தேர்வு

இந்திய வங்கிகள் சங்கம் நடத்தும் வங்கி அதிகாரிகள் பதவிக்கான எழுத்துத்தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வு பற்றிய விவரங்களை WWW.Ibps என்ற இணையதளங்களின் வழியாக அறிந்து கொள்ளலாம். இத்தேர்வுக்கு 4.9.2018-க்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். இத்தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

தகுதி

பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 30 வயதுக்கு மிகாதவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

பயிற்சி வகுப்புகள்

இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 17-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந்தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.3,500 ஆகும்.

பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் மிகவும் கண்டிப்பாக வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.

தங்கும் வசதி

பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்க விருப்பம் உள்ளவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தை 17.9.2018 அன்று நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர...

பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் திருச்செந்தூர், தூத்துக்குடி ரோட்டில் உள்ள சிவந்தி அகாடமியில் 17.9.2018 அன்று காலை 9 மணிக்கு ரூ.3,500-ஐ நேரில் செலுத்தி பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்படமாட்டாது.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். தொலை பேசி எண் 04639-242998, செல்போன் எண் 9442055243, 8682985148.

Next Story