குட்கா ஊழல் வழக்கு: அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


குட்கா ஊழல் வழக்கு: அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2018 9:45 PM GMT (Updated: 19 Sep 2018 12:17 AM GMT)

குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி நாகையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,


நாகை அவுரித்திடலில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். மதிவாணன் எம்.எல்.ஏ., விவசாய அணி செயலாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், தாமஸ் ஆல்வா எடிசன், கோவிந்தராசன், குமரவேல், செங்குட்டுவன், பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக நகர செயலாளர் போலீஸ் பன்னீர் வரவேற்றார்.

குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர், போலீஸ் அதிகாரி ஆகியோரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர். 

Next Story