காரில் சாராயம் விற்ற 2 பேர் கைது


காரில் சாராயம் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Sep 2018 9:45 PM GMT (Updated: 25 Sep 2018 11:33 PM GMT)

சிறுபாக்கம் அருகே காரில் சாராயம் விற்ற 2 பேர் கைது செய்துபட்டனர்.

விருத்தாசலம், 

சிறுபாக்கம் பகுதியில் காரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனமல்லி தலைமையிலான போலீசார் சிறுபாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடபாதி ஏரிக்கரையில் சந்தேகத்துக்கிடமான வகையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு காரில் 2 பேர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் வடபாதியை சேர்ந்த சரத்குமார்(வயது 28), விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமத்தை சேர்ந்த முரளி(27) என்பதும், காஞ்சீபுரத்தில் மலைப்பகுதியில் இருந்து காரில் சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சரத்குமார், முரளி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 550 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story