காஞ்சீபுரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு


காஞ்சீபுரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு
x
தினத்தந்தி 10 Oct 2018 9:45 PM GMT (Updated: 10 Oct 2018 7:37 PM GMT)

காஞ்சீபுரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே உள்ள வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 70). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர், குடிபோதையில் வீட்டின் மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே இறங்க முயன்றார்.

அப்போது போதையில் இருந்த அவர், நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்தகாயம் அடைந்த அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சுப்பிரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story