பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் இன்று ரெயில் சேவைகள் ரத்து


பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் இன்று ரெயில் சேவைகள் ரத்து
x
தினத்தந்தி 20 Oct 2018 10:30 PM GMT (Updated: 20 Oct 2018 8:03 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. துறைமுக வழித்தடத்தில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள தானே - கல்யாண் ரெயில் நிலையங்களுக்கு இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து செல்லும் விரைவு மின்சார ரெயில்கள் இவ்விரு ரெயில் நிலையங்களுக்கு இடையே ஸ்லோ வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.

இந்த ரெயில்கள் தானே - கல்யாண் இடையே அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.37 மணி முதல் பிற்பகல் 3.06 மணி வரை திவா, முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

துறைமுக வழித்தடத்தில் பன்வெல் - வாஷி இடையே இருமார்க்கத்திலும் காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக பன்வெல், பேலாப்பூர், வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி. செல்லும் ரெயில்கள் காலை 11.06 மணி முதல் மாலை 4.34 மணி வரையும், சி.எஸ்.எம்.டி.யில் இருந்து மேற்கண்ட இடங்களுக்கு செல்லும் ரெயில்கள் காலை 10.03 மணி முதல் பிற்பகல் 3.39 மணி வரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் தானே - பன்வெல் இடையே காலை 10.12 மணி முதல் மாலை 4.26 மணி வரையும், பன்வெல் - தானே இடையே காலை 11.14 மணி முதல் மாலை 4 மணி வரையும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

பன்வெல் - அந்தேரி இடையேயும் ரெயில் சேவை இருக்காது. இருப்பினும் சி.எஸ்.எம்.டி. - வாஷி இடையேயும், தானே - வாஷி, நெருல் இடையேயும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் காலை 10.35 மணி முதல் பிற்பகல் 2.35 மணி வரை போரிவிலி - அந்தேரி இடையே விரைவு வழித்தடத்தின் இருமார்க்கத்திலும் பராமரிப்பு பணி நடக்கிறது.

எனவே இவ்விரு ரெயில் நிலையங்களுக்கு இடையே விரைவு மின்சார ரெயில்கள் ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த தகவல்கள் மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

Next Story